மின்சார சபை ஊழியர்கள் நாளை 6 மணிநேர பணிப்புறக்கணிப்பில்!!

127

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள் நாளை (26.02.2026) அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

நாளை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 6 மணிநேர அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த போராட்டம் காரணமாக மின்சார சபையின் நாளாந்த சேவைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.