மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த அப்ரிடி!!

503

Afridi

பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடிய அப்ரிடிக்கு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே நேரம் சோயிப் மாலிக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்ரிடியுடன் உமர் அக்மல், அஹ்மத் சாஷாத் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான அணியில் அப்ரிடி மீண்டும் இடம் பிடித்துள்ளார். அணியில் இடம் பிடித்துள்ள மற்றவர்கள் விக்கெட் காப்பாளர் ரிஸ்வான் அஹ்மத் , ஹரிஸ் சொஹைல், ஜுல்பிகர் பாபர் ஆகியோர் ஆவர்.

முன்னாள் அணித் தலைவரான சோயப் மாலிக் சமீபத்தில் நடந்த ஐசிசி சம்பியன் கிண்ண போட்டியில் மோசமாக விளையாடியதால் நீக்கப்பட்டுள்ளார். அத்தொடரில் அவர் 25 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார்.

அதேபோல் விக்கெட் காப்பாளர் கம்ரான் அக்மல், தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பர்ஹத் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

அப்ரிடிக்கு மீண்டும் இடம் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 6 மாதமாக அணியில்இடம் பிடிக்க போராடி வந்தார் அப்ரிடி.

இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் விளையாட வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.