யாழில் பெரும் துயரம் : இளம் சட்டத்தரணி திடீர் உயிரிழப்பு!!

78

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் 40 வயதான சட்டத்தரணி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சட்டத்தரணில் அ இரட்டைக் குழந்தைகளின் தந்தை என கூறப்படுகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடியாக நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இளம் சட்டத்தரணியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.