இலங்கையில் வங்கிச் சேவையை பயன்படுத்தும் பொது மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்!!

15

வங்கிகள் அத்தியாவசிய சேவையாக வாரத்தின் ஐந்து நாட்களிலும் தொடர்ந்து செயல்படும் என இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வாரம் முழுவதும் முக்கிய வங்கிச் சேவைகளுக்கான அணுகலை உறுதிசெய்யும் வகையில்,

வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை திறந்திருக்கும். புதன்கிழமைக்கான செயல்பாடுகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.

தேசிய முன்னுரிமைகளுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய இலங்கை வங்கிகள் சங்கம், அன்றாடப் பரிவர்த்தனைகளுக்கு கையடக்க தொலைபேசி மற்றும் இணைய வங்கிச் சேவை உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளை வாடிக்கையாளர்கள் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

வாடிக்கையாளர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வங்கிக் கிளைகளுக்குச் செல்லுமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் எரிபொருள் மற்றும் எரிசக்தியைப் பாதுகாப்பதற்கான பரந்த முயற்சிகளுடன் ஒத்துப்போகின்றன, மேலும் இந்த தேசிய முயற்சிக்கு முடிந்தவரை ஆதரவளிக்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கிகள் சங்கம், நாட்டில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக மற்றும் சிறப்பு வங்கிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.