மனைவியை நடு வீதியில் காரில் கைவிட்டு தப்பியோடிய கணவன்!!

1132

car

மனைவியை காரில் கைவிட்டு போதைப் பொருள் சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காலி போத்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கணவனும் மனைவியும் ஆடம்பர கார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் பொலிஸாரிடம் சிக்கியதை அடுத்து, மனைவியை காரில் தனித்து கைவிட்டு கணவன் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து 5.15 கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 700 ரூபா பணத்தையும் கைப்பற்றியதாக போத்தல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.