இலங்கையில் பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர் : பொலிஸ் திணைக்களம்!!

746

Hang

பெண்களை விட ஆண்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக பொலிஸ் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 359 பெண்களும் ஆயிரத்து 267 ஆண்களும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட ஆண்களில் 71 வயதிற்கு மேற்பட்ட 142 பேர் எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை தற்கொலை செய்துகொண்டுள்ள பெண்களில் அதிகளவானோர் 17 வயதிக்கும் 20 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. தற்கொலை செய்தவர்களின் பெரும்பாலானவர்கள் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 703 ஆண்களும் 752 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 721 ஆண்களும் 805 பெண்களும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் எனவும் அந்த ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.