
வவுனியா மடுக்கந்த ஸ்ரீ தலதா விகாரையில் “Lord Buddha” ஓவியப் பயிலரங்கு (Paint Workshop) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கலை வரலாற்றில் தடம் பதிக்கும் வகையில் அமைந்த இந்தப் பயிலரங்கில், மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இப் பயிலரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பௌத்த நீதித்துறையின் பிரதான சங்க நாயக்க தேரரால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாணவர்களால் மிகவும் கலைத்துவமான முறையில் உருவாக்கப்பட்ட புத்த பெருமானின் உருவச் சிலைகள், வவுனியா மடுக்கந்த ஸ்ரீ தலதா விகாரையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.









