இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : மக்களே அவதானம்!!

164

நாட்டில் திங்கட்கிழமை (30.03.2026) பல பகுதிகளில் வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும் வெப்பம் “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதிக வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.