நோட்டன் பிரிட்ஜ் – விதுலிபுர பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 8 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர மஹா வித்தியாலயத்தில் ஔிந்திருந்த நிலையில் இவர் மீட்க்கப்பட்டுள்ளார்.
பெற்றோர் கைவிட்டுச் சென்ற நிலையில் தனது மாமியிடம் வளர்ந்த குறித்த சிறுமி, அதிக குழப்படியானவர் எனவும் இதனால் மாமி கடிந்துகொண்டதை அடுத்து பாடசாலையில் மறைந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.