நபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்த பல கோடி ரூபா பறிமுதல்!!

34

நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு தனியார் வங்கிகளில் 8 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல்காரரிடமிருந்து போதைப்பொருளைப் பெறுவதற்காக, அவரது முகவர்கள் இந்தப் பணத்தை வைப்பு செய்ததாக நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பொருள் முகவர்கள் நாளாந்த அடிப்படையில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் போதைப்பொருட்களை விநியோகிக்க இந்த கடத்தல்காரருக்கு உதவிய நான்கு பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.