பேத்தியை துஸ்பிரயோகம் செய்த தாத்தா கைது : யாழில் சம்பவம்!

336

Abuse

யாழ். நாவாந்துறை பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது பேத்தியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

குறித்த வயோதிபர், தனது மகளின் மகளான 8 வயது சிறுமியை இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுத்து தொடர்ந்து 9 நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார். அத்துடன் சம்பவத்தை வெளியில் சொல்ல வேண்டமெனவும் சிறுமியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த தாய் விசாரித்த போது, தாத்தா தனக்கு செய்ததை சிறுமி கூறியுள்ளார்.

அதனை அடுத்து சிறுமியின் தந்தையால் யாழ். பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

அவ் முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று காலை சிறுமியின் தாத்தா பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

இவரை இன்று யாழ். சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். பொலிசார் தெரிவித்துள்ளனர்.