வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சதுர்சிகா தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பாவனையை கைவிட்டதால் முதல்நிலை!!

347

தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பாவனையை கைவிட்டதால் முதல் நிலை பெற முடிந்தது என வர்த்தகப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதல்நிலை பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சதுர்சிகா சௌந்தரராசா தெரிவித்துள்ளார்.

அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், வர்த்தகப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையையும் தமிழ் மொழி மூலத்தில் மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலையை அடைவதற்கு உதவிய இறைவனுக்கு முதல் கண் நன்றிகள். அத்துடன் குடும்பத்தினருக்கும் நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் எனது அப்பா ஒரு மில் தொழிலாளி. அம்மா இல்லத்தரசி. அவர்களது உழைப்பினை பயன்படுத்தியே நான் இந்த சித்தியை பெற்றுள்ளேன்.

நான் இந்த சித்தியைப் பெற வழிப்படுத்திய பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

மிகுந்த கஷ்டப்பட்டு தான் நான் இந்த நிலையை அடைந்தேன். பாடசாலையிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் படித்தவற்றை வீட்டில் வந்து நீண்ட நேரம் மீட்டு படித்தேன்.

தொலைபேசி பாவனை, தொலைகாட்சி பார்த்தல் என்பவற்றை தவிர்த்து இருந்ததுடன் தேவையற்ற சிந்தனைகளையும் தவிர்த்திருந்தேன். ஒரு வழக்கறிஞராக வந்து வவுனியா மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் எனவும் தெரிவித்தார்.