
2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் மாத்திரம் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனித்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா சூடுவெந்தபுலவு அல்க்பால் மகா வித்தியாலயத்தில் 6 மாணவர்களும் , வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும், செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும்,
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் , வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் என 17 பாடசாலைகளில் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கலைப்பிரிவில் 526 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 24 மாணவர்கள் 3A சித்திகளையும் , 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.






