வவுனியா தெற்கு வலயத்தில் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F!!

36

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் மாத்திரம் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனித்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா சூடுவெந்தபுலவு அல்க்பால் மகா வித்தியாலயத்தில் 6 மாணவர்களும் , வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும், செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும்,

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் , வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் என 17 பாடசாலைகளில் கலைப்பிரிவில் 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கலைப்பிரிவில் 526 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 24 மாணவர்கள் 3A சித்திகளையும் , 38 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் F பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.