வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் 7 மாணவர்கள் மாத்திரமே 3A சித்தி!!

56

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் மாத்திரமே 3ஏ சித்தியினை பெற்றுள்ளனர்.

பெறுபேற்றின் அடிப்படையில் 3ஏ சித்திகளை 7 மாணவர்களும் , 2ஏ,பி சித்திகளை 5 மாணவர்களும் , ஏ,2பி சித்திகளை 5 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் கிதுர்சன் என்ற மாணவன் 3ஏ சித்தியும் , விஞ்ஞான பிரிவில் சியோன், அமுதினி, அகிரகன், அபினாந் ஆகிய நான்கு மாணவர்கள் 3ஏ சித்தியும் ,

வர்த்தகப் பிரிவில் ஜெயசன் என்ற மாணவன் 3ஏ சித்தியும் , கலைப்பிரிவில் துசாந்தினி 3ஏ சித்திகளையும் தனதாக்கி கொண்டுள்ளனர்.