வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 72.43% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி!!

42

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 72.43 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெறுபேற்றின் அடிப்படையில் 10 மாணவர்கள் 3ஏ சித்திகளையும் , 4 மாணவர்கள் 2ஏ பி சித்திகளையும் , 6 மாணவர்கள் ஏ 2பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

159 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 156 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் அவர்களில் 113 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதி சித்தியினை பெற்றுள்ளனதாக தெரிவித்துள்ளனர்.