
வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவி பத்மநாதன் பானுஷா சிறந்த பெறுபேற்றினை பெற்று சாவகச்சேரி மண்ணுக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
இவர், உயிர்முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் 3ஆம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 67ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவரின் சாதனை பாடசாலை சமூகத்துக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
குறித்த மாணவிக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.





