இலங்கை நடிகை சுபாஷினி உயிர்மாய்ப்பு : கணவரின் உருக்கமான பதிவு!!

36

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றின் பிரபலமான சீரியலில் நடித்துகொண்டிருந்த இலங்கை நடிகை சுபாஷினி தனது 37 ஆவது பிறந்தநாளுக்கு 7 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சீரியலில் நடித்து வந்த சுபாஷினி கடந்த 05 ஆம் திகதி இரவு சென்னை ஐயப்பன்தாங்கலில் இருக்கும் வாடகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை சுபாஷினியின் கணவர் பிபின், சமூக வலைத்தளத்தில் மனைவிக்காக, உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார். பிபின் சந்திரா சமூகவலைத்தள பதிவில்,

பெங்களூரில் வசித்து வரும் பிபின் சந்திரா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, உன் ஆத்மா சாந்தி அடையட்டும் போபா. உன்னை போன்று என்னை யாரும் காதலித்தது இல்லை. நான் உன்னை போன்று வேறு யாரையும் காதலித்தது இல்லை.

இன்று நீ உயிருடன் இல்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. என் நினைவுகளில், எனக்குள் நீ வாழ்கிறாய். நீ இங்கு இருப்பது போன்றே உணர்கிறேன். என்னை விட்டு ஏன் சென்றாய்?. உன் பிறந்தநாள், நம் திருமணநாளை கொண்டாட விரும்புகிறேன். நீ இல்லாமல் நான் இல்லை. அடிக்கடி பயணம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டோமே பேபி என தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 12 ஆம் திகதி சுபாஷினியின் பிறந்தநாளாகும். மேலும் ஏப்ரல் 21 ஆம் திகதி அவரின் திருமண நாளாகும். இப்படியொரு ஸ்பெஷலான மாதத்தில் வீடியோ காலில் கணவருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார் சுபாஷினி.

அவரின் கடைசி இன்ஸ்டா போஸ்ட் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர் போட்ட போஸ்ட் மாதிரியே இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.