எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு!!

450

Petrol

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சாரக் கட்டணங்கள் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.