தயவு செய்து அவதானமாக இருக்கவும் : இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

19

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் இன்று நண்பகல் வெளியிடப்பட்டுள்ள ஆம்பர் எச்சரிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை

இதேவேளை 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.