கனடாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம் : மர்ம நபர்கள் நடத்திய பயங்கரம்!!

558

கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:40 மணியளவில், Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த நபர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், காயமடைந்த நபரை மீட்டு தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, சந்தேகத்திற்குரிய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.