
கடந்த சில நாட்களாக இலங்கையில் தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றுடன் (21) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைய இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நகையக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக விலை அதிகரித்து வந்த நிலையில், இந்தச் சிறு சரிவு நுகர்வோர் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.





