வவுனியாவில் திரையில் நடிப்பவன் தலைவனல்ல தரையில் மக்களுக்காக போராடுபவனே தலைவன் என பாதாதை!!

269

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா நகரின் முக்கிய பகுதியில் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய பாதாதை (Banner) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சீமானின் ஆவேசமான உரையை பிரதிபலிக்கும் வகையில், பாதாதையின் கீழ் பகுதியில் மிக முக்கியமான அரசியல் வாசகம் “ திரையில் நடிப்பவன் தலைவனல்ல, தரையில் மக்களுக்காக போராடுபவனே தலைவன் “ என இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் திடீரென இத்தகைய ஒரு பாதாதை முளைத்திருப்பது, வட இலங்கையில் சீமானின் சித்தாந்தங்களுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பாக, ஈழத்தமிழர் உரிமைகள் குறித்து சீமான் தொடர்ந்து பேசி வருவதால், அங்குள்ள இளையோர் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அவர் ஒரு முக்கிய ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.

இந்த பாதாதையில் சீமான் கையை உயர்த்தி ஆவேசமாகப் பேசுவது போன்ற படமும், பின்னணியில் நெருப்பு எரிவது போன்ற வடிவமைப்பும் அமைந்துள்ளது.