தந்தையுடன் பேருந்தில் பயணித்த 14 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்: இராணுவ சிப்பாய் கைது!!

237

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணிகளுடன் பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (23.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 14 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 20ஆம் திகதி, பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி சென்ற பேருந்தில், 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வாழைச்சேனையிலிருந்து வீட்டிற்கு பயணித்துள்ளார்.

அதேவேளை, புனாணை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரும் அதே பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது, அந்த 14 வயது சிறுமியை குறித்த சிப்பாய் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகின்றது. இதனால், பேருந்தில் இருந்த சிலர் சிப்பாயை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, பேருந்து சாரதி பேருந்தை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சம்பவத்தை அறிவித்துள்ளார்.

அதன்பேரில், பொலிஸார் தாக்குதலுக்கு உள்ளான சிப்பாயை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் குறித்த இராணுவ சிப்பாயும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று(24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-