இலங்கையில் 100 வயதை கடந்த 144 முதியவர்கள்!!

464

Elders

இலங்கையில் 100 வயதை கடந்த 144 முதியவர்கள் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

10 பிள்ளைகளுக்கும் மேல் பெற்ற தாய்மாரில் 75 வயதையும் தாண்டிய 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.

இலங்கையின் மொத்த சனத் தொகையில் 11 வீதமானவர்கள் முதியவர்கள் எனவும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டில் 23 வீதமாக அதிகரிக்கும் எனவும் தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சுமிந்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.