
குருணாகலில் மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
கையடக்க தொலைபேசியில் விளையாட்டு ரீதியான சூதாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், யாரின் அறிவுறுத்தலுக்கு அமைய உயிரை மாய்த்துக் கொண்டான என்பது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
குருணாகல் நகரின் பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயதுடைய சந்தரூ தெவ்மிண பண்டார என்ற மாணவன் 4 மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மிகவும் திறமையான மாணவன், கடந்த 8ஆம் திகதி அதிகாலை தான் வசித்து வந்த குருநாகல் உடவல்பொல வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சட்டத்தரணியான தந்தைக்கும் ஆசிரியையான தாய்க்கும் பிறந்த குடும்பத்தின் மூத்த மகனான சந்தரூ, கல்வியில் காட்டிய சிறப்பான திறமை காரணமாக பாடசாலையில் இரண்டு வகுப்புகள் தரமுயர்த்தப்பட்டவராகும்.
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை அடிப்படையில் மாணவன் அவரது 2 தங்கைகள் மற்றும் பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கட்டிடத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மாணவனின் உடல் கீழே விழுந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
மாணவன் உயிரிழந்த இடத்தில் இருந்த அவரது தந்தையின் கையடக்கத் தொலைபேசியில் இணையத்தள சூதாட்ட விளையாட்டு இயங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாய்க்குத் தெரியாமல் அறையை விட்டு வெளியே சென்ற மாணவன், உயிரிழப்பதற்கு முன்னர் நீண்ட நேரம் தந்தையின் தொலைபேசியில் இந்த இணைய விளையாட்டில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.35 மணியளவில் கேட்டதாகக் கூறப்படும் ஒரு பயங்கரமான சத்தத்துடன்,
இரும்பு வேலியிலும் மோதி கீழே விழுந்த இந்த மாணவனின் மரணம் ஒரு விபத்தா அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்தமையா என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
தலை மற்றும் மார்பில் ஏற்பட்ட பலத்த காயங்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு மரணத்திற்குக் காரணமாக இருந்தாலும், குற்றத்தல புலனாய்வுப் பிரிவினரின் தீவிர கவனத்திற்குள்ளான குறித்த தொலைபேசி விளையாட்டு,
சில நேரங்களில் விளையாடுபவரின் மனதை விகாரப்படுத்தி உயிரை மாய்க்க கட்டளையிடும் அல்லது அதற்குத் தூண்டும் தன்மையைக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு மனநிலையின் காரணமாக அவர் தனது உயிரைத் மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்




