வவுனியா வடக்கு பிரதேச சபையில் புதூர் ஆலய உற்சவ முன்னாயத்தங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!!

21

வவுனியா வடக்கு, புதூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் முன்னாயத்த வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் நடைபெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதேச சபை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கான குடிநீர் வசதி, தற்காலிக வீதி புனரமைப்பு, மின்விளக்கு வசதிகள், வாகன தரிப்பிட வசதி மற்றும் சுகாதார நடைமுறைகளை கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, உற்சவ காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி சேவைகளை வழங்குவது தொடர்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பிரதேச சபையின் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு, தத்தமது பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

ஆலய உற்சவத்தை மிகச்சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இதன்போது உறுதி அளிக்கப்பட்டது.