தனியார் வங்கியியொன்றில் வாடிக்கையாளர்களது பெயர்களில் பணமோசடி : சிக்கிய போலி ஆவணங்கள்!!

8

கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஒன்பது ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கண்டி சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்கள் 09 பேர், போலி ஆவணங்களைத் தயாரித்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்களது பெயரில்

மோசடியான முறையில் கடன் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் கண்டிப் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தனியார் வங்கியின் ஆறு ஆண் அதிகாரிகள் மற்றும் மூன்று பெண் அதிகாரிகள் உட்பட ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வங்கியின் கிளையிலிருந்து 2012 முதல் 2019 வரை பெறப்பட்ட கடன்கள் தொடர்பான கடன் விண்ணப்பப் படிவங்களையும் கடன் ஒப்பந்தங்களையும் போலியாக தயாரித்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

32 முதல் 58 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள், கண்டி, பேராதெனிய, கட்டுகஸ்தோட்டா, புஸ்ஸெல்லாவ, ஹீரசகல, குருநாகல், பிலிமத்தலாவ, ஹல்லோலுவ மற்றும் குருதெனிய ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு செப்டம்பர் 23 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.