
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்ட கியூஆர் குறியீடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றத்தில் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருள் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எரிபொருள் விநியோகத்தின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை மேலும் சீரமைக்க கியூஆர் குறியீட்டு முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
இதற்கமைய, ஒவ்வொரு வகை வாகனத்திற்குமான எரிபொருள் ஒதுக்கீடு குறித்தும் அறிவித்துள்ளார்.
- கார் – 25 லீற்றர்
- முச்சக்கர வண்டி – 20 லீற்றர்
- வேன் – 50 லீற்றர்
- மோட்டார் சைக்கிள் – 8 லீற்றர்
- பேருந்து – 100 லீற்றர்
- நில வாகனம் – 40 லீற்றர்
- லொரி – 200 லீற்றர்
- சிறப்புப் பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர்




