வெளிநாடொன்றில் பொலிஸ் காவலில் இருந்த இலங்கை இளைஞன் மர்ம மரணம்!!

90

ஜப்பானின் Tsuchiura நகர பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tsuchiura பொலிஸ் நிலைய தகவலுக்கமைய, இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

தடுப்புக் காவல் மையத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த இலங்கை இளைஞன் குறட்டை விடுவதை நிறுத்தியதை கவனித்துள்ளார்.

உடனடியாக அவரது அறைக்குள் சென்று சோதித்தபோது, அந்த இளைஞர் எவ்வித அசைவுமின்றியும், சுவாசம் இல்லாமலும் இருப்பதைக் பொலிஸ் அதிகாரி கண்டறிந்துள்ளார்.

அவரது சுவாசப்பாதையைச் சீரமைக்க முயற்சித்த பின்னர், பொலிஸ் அதிகாரி உடனடியாக அம்பிலன்ஸை அழைத்துள்ளார்.

அந்த இளைஞன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அவரது உடலில் வெளியில் தெரியக்கூடிய காயங்கள் எதுவும் இல்லை எனவும் உயிரை மாய்க்க வாய்ப்பில்லை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற பிரேத பரிசோதனை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

நாங்கள் சரியான முறையில் தான் செயல்பட்டோம் என்று நம்புகிறோம் என அவசர மருத்துவச் சூழலை கையாண்ட விதம் குறித்து Tsuchiura பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.