பிரித்தானியாவில் இருந்து இலங்கையில் தாயை தேடும் மகள்!!

35

பிரித்தானிய தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி ஒருவர், தற்போது தனது பெற்ற தாயை தேடி தனது கணவருடன் இலங்கை வர தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

36 வருடங்களுக்கு முன்னர் அவர் பிரித்தானியாவுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இலங்கையில் தனது தாயை தேடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அவரது பிறப்புச் சான்றிதழில் கேமா என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 1990ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி களுபோவிலை பொது மருத்துவமனையில் பிறந்துள்ளார். அவரது தாயாரின் பெயர் விஜிதா கல்யாணி ஏகநாயக்க எனப் பதியப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவத்திற்காக விஜிதா என்ற தாயார் தெஹிவளை, ஹில் ஸ்ட்ரீட், இலக்கம் 15/3, சுதர்சனாராம மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரவசத்தின் பின்னர் 38 நாட்களான இந்த பெண் குழந்தை, சத்தியக்கடதாசி மற்றும் நீதிமன்ற உத்தரவு மூலம் பிரித்தானியாவை சேர்ந்த பிரீமன் பஸ்க் மற்றும் சூசன் ஆர்.பிரீமன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது இளம் வயதில் இருக்கும் அவர், தனது பிரித்தானிய கணவருடன் இலங்கை வர எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.