கொழும்பு – யாழ். ரயில் சேவை அடுத்தமாதம் 13ம் திகதி ஆரம்பம்!!

393

2

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஓமந்தை,கிளிநொச்சி, பளை வரை படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் வரை சேவை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை விஸ்தரிக்கும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெற்றது.

ஒக்டோபர் 13ம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்தது.