அரச வெசாக் விழாவை முன்னிட்டு இன்று முதல் மூடப்படும் இடங்கள் : பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

10

இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை ‘வெசாக் வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இறைச்சிக்கடைகள், இறைச்சிக்கூடங்கள், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேற்கூறிய இடங்கள் இன்று (27) முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மே 30, 31 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடவும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த காலங்களில் அமைக்கப்பட்டிருந்த பேய் மாளிகைகள் மற்றும் விசித்திரமான நடனங்கள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவற்றை முற்றாகத் தவிர்க்குமாறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.