மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!!

337

Murder

நாகொட – ரெக்அத்தனகொட – வாதுவெலிவிட்ட பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கொலை செய்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று இரவு 8 மணியளவில் இக்கொலை இடம்பெற்றுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் நாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.