தமிழர் பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த சிறுமி!!

18

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீட்டின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(28.05.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்ற நிலையில், தந்தையுடனும், சகோதரனுடம் இருந்து வந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று(28) மாலை 5.30 மணியளவில் சிறுமி அவரது சகோதரன் மட்டுமே தனியாக இருந்து வந்துள்ள நிலையில், தந்தையார் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த போது குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள தொட்டியில் சிறுமி கிடப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.