பரபரப்பை ஏற்படுத்திய டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபர் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்!!

22

ஹட்டன், டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (27) கைது செய்யப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்னும் தலைமறைவு

இருப்பினும், அவர் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தபோது தப்பித்து, இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகக் கூறும் ஊடகச் செய்திகளை பொலிஸார் மறுத்ததுடன், தப்பிச் சென்ற சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஹட்டன்-டிக்கோயா நகரப் பகுதியில் கணவன்-மனைவியைக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளுடன் தப்பிச் சென்றதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நகரில் உள்ள ஒரு கடைக்குள் வசித்து வந்த தம்பதியினர், வெள்ளிக்கிழமை (22) அன்று கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.