மட்டக்களப்பில் சொந்த மகளிடம் தந்தை செய்த மோசமான செயல்!!

451

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையை நேற்று (01) இரவு பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரின் தந்தை தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் மா அதிபருக்கு இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இருந்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து பொலிசார் மதுபானசாலை விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த 60 வயதுடைய தந்தையை நேற்றையதினம்(1) கைது செய்தனர்.

குறித்த யுவதி தனது தந்தை தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதால் அவருடன் இருக்க முடியாது என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை சோதனை செய்த போது அவர் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை அதிகமாக தரை இறக்கம் செய்து வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த பிரதேச பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.