
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (01) மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், வைகாசி விசாகத் திருநாளன்று நடைபெறும் பொங்கல் திருவிழாவிற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

இதன்போது உப்புநீரில் விளக்கெரியும் எம்பிராட்டிக்கு நேர்த்திகடன்களை நிறைவேற்ற பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதோடு பெண்கள் தூக்கு காவடிகள் எடுத்தும், பொங்க்கல் பொங்கியும் தங்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

இரவில் அம்மனின் ஆலயம் தங்க குவியல்போல் காட்சி அளித்த புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.





