4 வருட காதல் : மனைவியை கைவிட்டு மாமியாரை திருமணம் செய்த மருமகன்!!

26

4 வருட ரகசிய காதல் தொடர்பில் இருந்த மருமகனும் மாமியாரும், திருமணம் செய்த சான்றிதழை வெளியிட்டுள்ளமை உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாவட்டம் கான்பூரில் நடந்திருக்கிறது.

இருவரும் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டு அதற்கான சான்றிதழை காட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் உண்மைதான் என்றாலும் இது தொடர்பாக யாரும் காவல் நிலையத்தில் இதுவரை புகார் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களாக மாமியாருடன் ரகசிய உறவில் இந்த மருமகன் இதற்கு மேல் பொறுக்க முடியாது என முடிவெடுத்து மனைவியை பிரிந்து மாமியாரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

கழுத்தில் தாலியுடன், கையில் திருமண சான்றிதழை வைத்துக்கொண்டு ஜோடியாக அவர்கள் வெளியிட்ட வீடியோவால் நெட்டிசனங்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.