இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு அரச வேலைவாய்ப்புகள் : வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!!

398

இந்த ஆண்டு 120,000க்கும் மேற்பட்டோர் அரச சேவையில் சேர்க்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அரச சேவையை வலுப்படுத்தாமல், நாட்டை கட்டியெழுப்பும் இலக்குகளை அடைய முடியாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க நிறுவனங்களும் பாடசாலைகளும் அதிக அபாயமுள்ள இடங்களில் உள்ளன என்று பிரதமர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரச ஊழியர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான பொருளாதார வலிமையை வழங்குவதற்காக அரசாங்க வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர்கள் பதவியேற்றபோது உணர்ந்த மகிழ்ச்சியுடன் ஓய்வுபெறும் வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டி பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, இலங்கை தொழில்நுட்ப சேவையின் மூன்றாம் தர தொழில்நுட்ப அதிகாரி பதவிகளுக்கான 133 நியமனக் கடிதங்கள், அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்டன.