
கண்டி தெல்தெனியவில் காருக்குள் இருந்த பெண்ணின் சடலம் தொடர்பில், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அம்பாறை பெண் மருத்துவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மு ன்னெடுக்கப்படுகின்றன.
அதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. உயிரிழந்த பெண் மருத்துவருடன் வாழ்ந்து வந்த நபர், அவரது சடலத்தைக் காரின் உள்ளேயே வைத்துக்கொண்டு, எவ்விதப் பதற்றமும் இன்றித் தனது வீட்டிற்குச் சென்றுள்ளமை அதிர்ச்சித் தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஏற்கனவே ஒரு பெண்ணைச் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துள்ளார்.
எனினும், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, அந்த முதல் மனைவி விவாகரத்துப் பெற்று அண்மையில் நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பின்வருமாறு கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்: “எங்கள் மகனை நாங்கள் கடந்த 8 வருடங்களாக நேரில் பார்க்கவில்லை.
அவன் எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான் என்ற விவரங்கள் எங்களுக்குத் தெரியாது.
ஆனால், அவன் அவ்வப்போது எங்களது வங்கிக் கணக்கிற்கு ஒன்றரை இலட்சம் (1,50,000) ரூபாய் பணத்தை மட்டும் அனுப்பி வைப்பான்.” இக்கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் தகவல் வெளியிடும்போது, “சந்தேகநபர் சிறுவயது முதலே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு, பலரை ஏமாற்றிப் பணம் மற்றும் பல்வேறு பொருட்களைப் பெற்ற ஒரு ஏமாற்றுக்காரன்.
எனது தம்பி என்றபோதிலும், அவனின் முகத்தைக் கூடப் பார்க்க நான் விரும்பவில்லை; அவன் அந்தளவிற்கு மோசமான செயல்களைச் செய்யும் வெறுக்கத்தக்க ஒரு மனிதன் என குறிப்பிட்டார்.




