தாய் – தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்!!

81

எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையிலேயே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.