வவுனியா ஈஸ்வரிபுரம் இளந்தளிர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!

18

வவுனியா ஈஸ்வரிபுரம் இளந்தளிர் முன்பள்ளியின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு நேற்றுமுன்தினம் (21.07.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினர்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் பாலசுப்ரமணியம் கோணேஸ்வரி மற்றும் ஓய்வுநிலை முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் இராஜேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக சிவசுப்ரமணியம் லோகேஸ்வரன் (அதிபர் – மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலய சமூக சேவையாளர்), பாலச்சந்திரன் சிந்துஜன் (பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்), ரூபன் (தலைவர் – ஈஸ்வரிபுரம் கிராம அபிவிருத்தி சங்கம்)
அத்துடன்,

அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுகளைக் கண்டு களித்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.

நிகழ்வின் நிறைவில் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.