வெளிநாட்டுத் தம்பதி ஓட்டிச் சென்ற மோட்டார் வாகனத்தால் இளைஞன் பலி!!

138

கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை செல்லும் வீதியில் மோட்டார் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுத் தம்பதி, திருகோணமலை நோக்கி பயணித்த காரும் கந்தளாய் பகுதியிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளிலுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இதன்போது 148ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் கித்துல்உத்துவ பிரதேசத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.

விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கவலைக்கிடமான நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.