
அளுத்கம – தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடிகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாகலந்தாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தாயும், அவரது 15 வயதுடைய மூத்த மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





