மனைவியின் தலையைத் துண்டித்து கணவன் செய்த கொடூர செயல்!!

18

பீகார் மாநிலத்தில் சமையல் செய்யத் தாமதமானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மனைவியைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த நபரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் ஜெஹானாபாத் பகுதியைச் சேர்ந்தவர் குணால் குமார். வேலைக்குச் செல்லாமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தனது மனைவி அன்ஷு தேவியுடன் (25) அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குடும்பத்தினர் விவசாய நிலத்திற்குச் சென்றிருந்த நேரத்தில், குணால் குமார் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்த மனைவியிடம் உடனடியாக உணவு வழங்குமாறு கேட்டுள்ளார்.

உணவு தயாராகச் சிறிது நேரமாகும் என்று மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த குணால் குமார், வீட்டில் இருந்த கோடாரியால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் அன்ஷு தேவியின் தலை துண்டிக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். கொலையைச் செய்த பிறகு, துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையைக் கயிற்றில் கட்டி வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்டு, தப்பிச் செல்லாமல் மரத்தின் அடியிலேயே அமர்ந்திருந்துள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அன்ஷு தேவியின் உடலையும் தலையையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடூரக் கொலையில் ஈடுபட்ட குணால் குமாரைக் காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.