காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு : இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

12

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த இளம் காதல் ஜோடி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும், அருகில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் கூறிச் சம்மதம் வாங்கி, விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டனர். ஆனால், இருவீட்டுப் பெற்றோரும் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் சம்மதிக்காததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இருவரும், தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். “சேர்ந்து வாழ முடியாத சூழலில், ஒன்றாகவே உயிரை விட்டுவிடலாம்” என முடிவெடுத்து இருவரும் விஷம் அருந்தியுள்ளனர்.

இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.