இலங்கையில் தொடர் மழையின் கோர தாண்டவம் முதலாவது மரணம் நாவலப்பிட்டியவில் பதிவு!!

116

நாவலப்பிட்டிய – சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.

இதன்படி, நாவலப்பிட்டிய – சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 65 வயதுடையவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மலையகத்தில் வாழும் மக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பிரதேசத்தில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக திரு.பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.