12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

111

தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (07) காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.