வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பலி : பொலிசார் விசாரணை!!

2444

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சோகமான தொடரூந்து விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்துடன் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று( 17.08.2026) காலை தாண்டிக்குளம் தொடரூந்து பாதையைக் கடக்க முயன்றபோதோ அல்லது பாதைக்கு அருகில் நின்றபோதோ இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வவுனியா பொலிஸார் உடனடியாக விரைந்து உடலைக் கைப்பற்றியதுடன், விபத்துக்கான சரியான காரணம் குறித்தும், இது கவனக்குறைவால் நடந்த விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.