நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகைகளை திருடிய இளைஞர்கள்!!

22

man stealing ear rings from dead nepal flood victims: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்தில் இருந்து நகைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர். நேபாள காவல்துறை மற்றும் ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் உயிரிழந்து நாராயணி ஆற்றில் கரை ஒதுங்கிய சடலத்தின் காதுகளில் இருந்த தங்க காதணிகளை 2 இளைஞர்கள் அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து, பரத்பூர் மாநகராட்சி-1 இல் உள்ள பொக்காரா பேருந்து நிலையம் அருகே அந்த வீடியோவில் இருந்த நபர்களான 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சௌத்ரி ஆகியோரை நேபாள காவல்துறை அடையாளம் கண்டு கைது செய்தது.

இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில் உயிரிழந்தவர்களை குறிவைத்து நடைபெறும் கொள்ளை அல்லது வேறு எந்த மனிதாபிமானமற்ற செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

நேபாளம் சந்தித்த மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், சேதமடைந்த சாலைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள்,

மலைபோல் குவிந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நேபாளத்தின் எல்லை அருகே சோசென் கோலா – புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயற்கையான தடுப்பு ஏரி உருவாகியுள்ளது.

இது உடைந்தால் 2ஆம் கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.